Sunday, February 14, 2010

காதலர் தினம்

 

உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.

-
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.

-
நம் முதலிரவுக்குக் காரணமாய்,
தாலி மட்டுமே இருக்கக்கூடாது
என்பதும்,
நான் உன்னைக் காதலித்ததற்கு
ஓர் காரணம்..
-
உன்னைக் காதலிப்பது
உனக்காக மட்டுமல்ல..
உன்னைப் போலவே
ஒரு மகளும் வேண்டும்
என்பதற்காகத்தான்...
-
எதோ ஒரு எண்ணிலிருந்து
நீ 'வெற்று குருந்தகவல்'
அனுப்பினால் கூட,
அனுப்பியது நீதான்
என கண்டுபிடிக்கும் சக்தியை
காதல் தந்திருக்கிறது!!
-
எங்கோ இருக்கும் நீ
இங்கு இருக்கும் என்னிடம்,
அங்கே  தொலைந்த
உன் கைக்கடிகாரத்தைக்
கண்டுபிடித்துத் தரும்படி அழுதாயே,
இதைவிட யார் காதலை
அழகாய்ச் சொல்ல முடியும்!!??
-
நதியில் குளித்து
தன்னை சுத்தமாக்கிக்
கொள்ளும் பெண்ணில்லை நீ...
நதியில் குளித்து
நதியை சுத்தமாக்கும்
பெண் நீ..!
-
கடவுள் இல்லை
என்பதற்கு
சரியான சாட்சி நம் காதல்..
இருந்திருந்தால்,
அவனை கும்பிடாத எனக்கு,
உன்னைப் போல் ஒருத்தியைக்
கொடுத்திருப்பானா??!!
-
நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!
-
நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ..
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்..!! 

 -

என்ன எழுதினாலும், உன்னுடைய“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
 

Ad